Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

உயிர் பிரியும் நேரத்தில் அன்னை காப்பாற்றினார்.

அது ஆன்மிக திருஷ்டி.

Volume 8, page 60

  • இறக்கும் தருவாயில் அன்னை பாதம் நெஞ்சில் பட்டு நெடுநாள் வாழ்ந்தவர் ஒருவர்.
  • ஆசிரமம் வந்த முதிய பெண் ‘எனக்கு நிம்மதியான சாவு வேண்டும்’ எனக் கேட்டு ஒரு மாதத்திற்குள் Television பார்த்துக் கொண்டே உயிரை விட்டார்.
  • அன்னையை ஜீவன் நினைவு கூர்ந்தால், உயிர் பிரியாது.
  • 25 வயதில் ஆயுள் முடிபவரை அன்னை 75 வயதுவரை உயிரோடு வைத்திருந்தார்.
  • 21 வயதில் ஆயுள் முடிவதால் ஆசிரமத்தில் சேர்ந்தவர் மேலும் 50 ஆண்டுகளிருந்தார்.
  • சிறு வயதில் ‘இன்று உயிர் போகும்’ என்று தினமும் தோன்றியதால் திருமணம் செய்யாமல் இராணுவத்தில் சேர்ந்தவர் தினமும் ஒரு கோயிலுக்குப் போய் வேண்டுவார்.
  • உயிர் போகவில்லை - உயிரை எடுப்பதாக வாழ்வு அமைந்தது.
  • இராணுவச் சுற்றுலா பாண்டி வந்தபொழுது சமாதிக்கு அந்த இளைஞர் வந்தார்.
  • இனி உயிர் போகாதது போல் தோன்றியது. ஆனால் பயம் போகவில்லை.
  • இராணுவ வேலையை ராஜினாமா செய்து நெய்வேலியில் சேர்ந்து திருமணம் செய்து மாதந்@தாறும் சமாதிக்கு வருவார்.
  • பயம் வேரற்றுப் போனாலும், இருக்கிறது.
  • நெய்வேலியில் பகவான் பேரில் பள்ளி அமைத்தார்.
  • தெம்பு நம்பிக்கையாயிற்று.
  • 58 வயதில் ஓய்வு பெற்றார்
  • பாண்டி சூழல், போகும் உயிரைக் காக்கும்
  • சமாதி, போகும் உயிரைப் போக விடாது.
  • இவை சூழலின் சக்தி.
  • மூன்று நாள் பிரார்த்தனையை ஒருவர் மேற்கொண்டால் அருகில் உள்ளவர் உயிர் பிரியும் தருணத்தில் பிழைத்த செய்தி வரும்.
  • ‘12 வயதில் ஆயுள் முடிந்தவர்’ பிற்காலத்தில் ஏற்படப் போகும் ஆசிரமத் தொடர்பால் 72 வயதைத் தாண்டினார்.
  • அன்பர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் ஜாதகம் சொல்லிய காலத்தைக் கடந்து வாழ்வது எவரும் அறியாதது.
  • அன்னையை அறிந்தபின் ஆயுள் வளராதவரில்லை.
  • போட்டி பொறாமைக்கு உட்பட்டு மனம் வெதும்பியவர் அன்னையின் அரவணைப்பை விட்டு விலக முடிவு செய்த நேரம் அன்னை தோன்றி ‘போகாதே’ என்றார்.
  • அவர் 94 வயது வாழ்ந்தார்.
  • பட்டுப் போன மாமரம் அன்னையைக் கேட்டு நெடுநாள் வாழ்ந்தது.
  • Life என்ற பத்திரிக்கை ஆசிரியர் தம் உயிரைக் காப்பாற்றியபொழுது செயல்பட்டது சத்திய ஜீவிய சக்தி.
  • Morris Good Man உயிர் பிழைத்தது உலகம் வியக்கும் செய்தி.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறப்பிலாரம்பித்து மரணத்தில் முடியும் மனித வாழ்வைப் பிறப்புக்கு முன்னும், மரணத்திற்குப் பின்னுமாக பிரபஞ்சம் முழுவதும் விரிவுபடுத்துவது திருவுருமாற்றம்.

*********



book | by Dr. Radut