11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவருக்கு இரண்டு கண் போக வேண்டும்.
தனக்கு இரண்டு கண் போனாலும், அடுத்தவருக்கு ஒரு கண்ணாவது வர வேண்டும்.
- கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல.
கும்பிடப் போன தெய்வம் கூடவேயிருப்பது தெரிவதில்லை.
- சுத்தம் சோறு போடும்.
சுத்தம் சோற்றிலிருந்து சொர்க்கம் வரை தரும்.
- குரைக்கிற நாய் கடிக்காது.
வழிபாடு வழி காட்டாது.
- மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.
அருள் வந்தால் ஆயுள் முழுவதும் இருக்கும்.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் எந்தப் பெரிய மனிதனுக்கும் சொந்தமான விஷயங்களில் தெளிவு, நேர்மையிருக்க முடியாது. |
******
- Login to post comments