Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

49. பிரம்ம ஜீவியம் சித்திப்பது - மனம் அதன் மூலத்தை அடைகிறது.

  • பிரம்மம் சித்திப்பது மோட்சம் பெறுவது.
  • பிரம்மம் சித்திக்கும் நிலைகள் பல.
  • ஜீவாத்மா சித்திப்பது முதல் நிலை.
  • ஜீவாத்மாவுக்கு மற்ற அனைத்து ஜீவாத்மாவும் சித்திப்பது ஒரு நிலை.
  • பரமாத்மா சித்திப்பது பெரிய நிலை.
  • டாக்டர், இன்ஜினீயரிங் பட்டங்களுக்குப் பயிற்சியுண்டு. அது லேசான பயிற்சி.
  • அந்தப் பயிற்சி தொழில் செய்யப் போதாது.
  • தொழிலில் அனுபவசாலியிடம் வேலைக்கமர்ந்து பயிற்சி பெற்றால், சொந்தமாகச் செயல்படலாம்.
  • பட்டமே முடிவானால், அதற்குப் பயிற்சியோ, தொழிலோ வாராது.
  • மோட்சம் அது போல் பரமாத்மாவை, பிரம்மத்தை அடைவது.
  • பயிற்சி, அனுபவம் மூலம் பெற்ற பட்டம் தொழில் செய்யப் பயன்படும்.
  • இது பூரண யோகம்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர், பிரம்ம ஜீவியம் பெற்றவர் ஆசிரமத்தில் 6 பேர் என்றார்.
  • பூரணப் பயிற்சியின்றி பெற்ற பிரம்ம ஜீவியமிது.
  • டாக்டர் தொழிலில், நர்ஸ், கம்பவுண்டர், மருந்து கடைக்காரன் ஆகியவர்க்கு டாக்டருடைய திறமை அனுபவத்தால் சில விஷயங்களில் முழுமையாகவும் வருவதுண்டு.
  • பிரம்ம ஜீவியம் என்பது மாயை எனப்படும், இது பிரம்மத்தின் ஜீவியம்.
  • சச்சிதானந்தமே இதனால் சிருஷ்டிக்கப்படுகிறது.
  • சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தால் சிருஷ்டிக்கப்படுகிறது.
  • மனம் சத்தியஜீவியம் உற்பத்தி செய்வது.
  • பெரிய தலைவர், பணக்காரர், கம்பனி முதலாளி, மந்திரி ஆகியவர்களை அணுகி வேலை செய்பவர்கள் பல நிலைகளிலிருப்பார்கள்.
  • உடனுறைந்து உதவி செய்வார்கள்.
  • எடுபிடி வேலை செய்வார்கள்.
  • தானே வந்து கலந்து கொள்வார்கள்.
  • ஒரு நாள் அழைத்தால் ஒட்டிக் கொள்வார்கள்.
  • இவர்கள் டிரைவராக இருந்தாலும் தலைவருடைய பவர் ஓரளவு இருக்கும்.
  • யாரோ ஒருவர் தலைவருக்கே வாரிசாகவும் வருவதுண்டு.
  • இவை வாழ்க்கை வண்ணங்கள்.
  • ஒரு ஆத்மா மோட்சம் பெற்றால் அதற்கு முன் 21 தலைமுறைகட்கு பயனுண்டு.
  • அதன் பின் வரும் சந்ததிகளில் அது அழியாது. ஏதோ ஒரு மூலையிலிருக்கும்.
  • இந்தியருடம்பில் ஜோதியுண்டு. மேல் நாட்டார் உடல் இருளாக இருக்கிறது என்கிறார் அன்னை.
  • பிரம்ம ஜீவியம் எந்த வழி வந்தாலும் பிரம்ம ஜீவியம் பெரியது.
  • அன்னை சூழலுக்கே அந்தச் சக்தியுண்டு.
  • ஒருவர் பிரம்ம ஜீவியத்தை எந்த அளவில் பெற்றுவிட்டாலும், அவருக்கு யோகம் பலிக்கும்.
  • கட்சியில் மெஜாரிட்டியிருந்தால் தலைமையுண்டு.
  • படிப்பு, அறிவு எவ்வழி வந்தாலும் அதற்கு உயர்வுண்டு.
  • பணம் எப்படி சம்பாதித்தாலும், அதற்குப் பவர் உண்டு.
  • பவர் பணம் வந்த வழிப் போல அமையும்.
  • அன்பர்கட்கு இந்த வாய்ப்பு எப்பொழுதும் உண்டு.
  • ஸ்டாலின் புரட்சியில் அப்படி தலைமைப் பதவிக்கு வந்தவரேயாகும்.
  • குருஷேவ் 29 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாமல் தலைமைக்கு வந்தார்.
  • குருவாயூர் குருக்கள் வீட்டு வேலைக்காரி அவ்வழி மோட்சம் பெற்றாள்.
  • காஞ்சீபுரம் கோவிலில் மூகம் கவியானது அது போல.
  • ஆடு மேய்த்த காளிதாசன் பெரிய கவியானதும் அதைப் போலவே.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஊனக் கண் பொருள்களைத் தனித்தனியே காண்கிறது.
அதை ஆராய்வது விஞ்ஞானம்.
ஞானக் கண் சிருஷ்டியை மயன் செய்ததை அறிகிறது.
புறத்தில் அகத்தைக் காண்பது பூரணம்.
 

*******



book | by Dr. Radut