10. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
49. பிரம்ம ஜீவியம் சித்திப்பது - மனம் அதன் மூலத்தை அடைகிறது.
- பிரம்மம் சித்திப்பது மோட்சம் பெறுவது.
- பிரம்மம் சித்திக்கும் நிலைகள் பல.
- ஜீவாத்மா சித்திப்பது முதல் நிலை.
- ஜீவாத்மாவுக்கு மற்ற அனைத்து ஜீவாத்மாவும் சித்திப்பது ஒரு நிலை.
- பரமாத்மா சித்திப்பது பெரிய நிலை.
- டாக்டர், இன்ஜினீயரிங் பட்டங்களுக்குப் பயிற்சியுண்டு. அது லேசான பயிற்சி.
- அந்தப் பயிற்சி தொழில் செய்யப் போதாது.
- தொழிலில் அனுபவசாலியிடம் வேலைக்கமர்ந்து பயிற்சி பெற்றால், சொந்தமாகச் செயல்படலாம்.
- பட்டமே முடிவானால், அதற்குப் பயிற்சியோ, தொழிலோ வாராது.
- மோட்சம் அது போல் பரமாத்மாவை, பிரம்மத்தை அடைவது.
- பயிற்சி, அனுபவம் மூலம் பெற்ற பட்டம் தொழில் செய்யப் பயன்படும்.
- இது பூரண யோகம்.
- பகவான் ஸ்ரீ அரவிந்தர், பிரம்ம ஜீவியம் பெற்றவர் ஆசிரமத்தில் 6 பேர் என்றார்.
- பூரணப் பயிற்சியின்றி பெற்ற பிரம்ம ஜீவியமிது.
- டாக்டர் தொழிலில், நர்ஸ், கம்பவுண்டர், மருந்து கடைக்காரன் ஆகியவர்க்கு டாக்டருடைய திறமை அனுபவத்தால் சில விஷயங்களில் முழுமையாகவும் வருவதுண்டு.
- பிரம்ம ஜீவியம் என்பது மாயை எனப்படும், இது பிரம்மத்தின் ஜீவியம்.
- சச்சிதானந்தமே இதனால் சிருஷ்டிக்கப்படுகிறது.
- சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தால் சிருஷ்டிக்கப்படுகிறது.
- மனம் சத்தியஜீவியம் உற்பத்தி செய்வது.
- பெரிய தலைவர், பணக்காரர், கம்பனி முதலாளி, மந்திரி ஆகியவர்களை அணுகி வேலை செய்பவர்கள் பல நிலைகளிலிருப்பார்கள்.
- உடனுறைந்து உதவி செய்வார்கள்.
- எடுபிடி வேலை செய்வார்கள்.
- தானே வந்து கலந்து கொள்வார்கள்.
- ஒரு நாள் அழைத்தால் ஒட்டிக் கொள்வார்கள்.
- இவர்கள் டிரைவராக இருந்தாலும் தலைவருடைய பவர் ஓரளவு இருக்கும்.
- யாரோ ஒருவர் தலைவருக்கே வாரிசாகவும் வருவதுண்டு.
- இவை வாழ்க்கை வண்ணங்கள்.
- ஒரு ஆத்மா மோட்சம் பெற்றால் அதற்கு முன் 21 தலைமுறைகட்கு பயனுண்டு.
- அதன் பின் வரும் சந்ததிகளில் அது அழியாது. ஏதோ ஒரு மூலையிலிருக்கும்.
- இந்தியருடம்பில் ஜோதியுண்டு. மேல் நாட்டார் உடல் இருளாக இருக்கிறது என்கிறார் அன்னை.
- பிரம்ம ஜீவியம் எந்த வழி வந்தாலும் பிரம்ம ஜீவியம் பெரியது.
- அன்னை சூழலுக்கே அந்தச் சக்தியுண்டு.
- ஒருவர் பிரம்ம ஜீவியத்தை எந்த அளவில் பெற்றுவிட்டாலும், அவருக்கு யோகம் பலிக்கும்.
- கட்சியில் மெஜாரிட்டியிருந்தால் தலைமையுண்டு.
- படிப்பு, அறிவு எவ்வழி வந்தாலும் அதற்கு உயர்வுண்டு.
- பணம் எப்படி சம்பாதித்தாலும், அதற்குப் பவர் உண்டு.
- பவர் பணம் வந்த வழிப் போல அமையும்.
- அன்பர்கட்கு இந்த வாய்ப்பு எப்பொழுதும் உண்டு.
- ஸ்டாலின் புரட்சியில் அப்படி தலைமைப் பதவிக்கு வந்தவரேயாகும்.
- குருஷேவ் 29 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாமல் தலைமைக்கு வந்தார்.
- குருவாயூர் குருக்கள் வீட்டு வேலைக்காரி அவ்வழி மோட்சம் பெற்றாள்.
- காஞ்சீபுரம் கோவிலில் மூகம் கவியானது அது போல.
- ஆடு மேய்த்த காளிதாசன் பெரிய கவியானதும் அதைப் போலவே.
தொடரும்.....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் ஊனக் கண் பொருள்களைத் தனித்தனியே காண்கிறது. அதை ஆராய்வது விஞ்ஞானம். ஞானக் கண் சிருஷ்டியை மயன் செய்ததை அறிகிறது. புறத்தில் அகத்தைக் காண்பது பூரணம். |
*******
- Login to post comments