Skip to Content

05. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே

ஸ்ரீ அன்னை ஸ்ரீ பகவான் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு சமர்ப்பணம் செய்து அநேக கோடி நமஸ்காரங்களுடன் இதை எனது அனுபவ கடிதமாக எழுதுகிறேன். நான் இருப்பது நெய்வேலி நகரம். எனக்கு சொந்தமான plot ஒரு சிறிய அளவு அதாவது ½ground நிலம் சேலத்திலுள்ளது. இது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது தகப்பனார் எனக்கு மிகச்சிறிய தொகையாகிய ரூ.20,000க்கு வாங்கிக் கொடுத்தது. அதை கடந்த 7, 8 ஆண்டுகளாக விற்றுவிட வேண்டுமென தீவிரமாக ஏற்பாடு செய்தேன். அதை எனக்கு விற்றவரே அதன் அருகாமையில் அடுத்த plotல் வசிப்பதால் மீண்டும் தானே வாங்கிக் கொள்ளும் அபிப்பிராயத்தில், என் நோக்கம் தெரிந்து கொண்டு மிக மிக மலிவான - மோசமான விலைக்கே - கொடுத்துவிட வேண்டும் என்று அடாவடியாக பேசி வந்தார். மேலும் ஊர் நிலவர விலைக்கு பாதி விலைகூட இல்லாததால் எனக்கு இஷ்டமில்லாமல் இருந்தது. Broker மூலம் பேசியும் யார் அந்த இடத்தை பார்ப்பதற்கு வந்தாலும் எந்த பேச்சும் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் தடுத்து வந்தார். நாள் கடந்ததே தவிர எனக்கு எந்த வேலையும் நடக்கவில்லை. முடிவாக நான் ஸ்ரீ அன்னை திருவுளப்படி நிறைவேறட்டும் என்று இருந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் சேலத்திலுள்ள எனது சகோதரரும், அவரது மனைவியும் இதை சவாலாக எடுத்துக் கொண்டு நல்ல விலைக்கே கொடுப்பதாக broker மூலம் ஏற்பாடு செய்து வந்தார்கள். கடந்த பிப்ரவரி மாதம் ஒருவர் எந்த பேச்சுவார்த்தை வந்தாலும் தான் பார்த்துக் கொள்வதாக முன்வந்து நல்ல விலைக்கு அதாவது சதுர அடி ரூ.425 என முடித்து advanceசும் கொடுத்துவிட்டு சென்றார். எந்த இடையூறு வந்தாலும் அன்னையின் அருள் நம் பக்கம் உள்ளது என்ற நம்பிக்கைதான் பரிபூரணமாக இருந்தது. இந்த மாதம் 11.03.2011ல் registration வைத்துக்கொள்வதாக முடிவாகியது. ரிஜிஸ்ட்ரேஷனும் நல்ல முறையில் முடிந்து கடைசி நேரம் வரை எந்த கலாட்டாவும் இல்லாமல், ஒரு தடங்கலும் இல்லாமல், எந்த சச்சரவும் இல்லாமல், தொகையை அதாவது ரூ.5,50,000த்தை வாங்கி கொடுத்துவிட்டார்கள். விஷயம் நல்லபடி நிறைவேறினது அன்னையின் அருள் எல்லா இடத்திலும் நின்று நடத்திக் கொடுத்து நிறைவேற்றிவிட்டது. ஸ்ரீ அன்னைக்கும், ஸ்ரீ பகவானுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி இதில் முழுமூச்சாக பிரயாசைப்பட்டு நிறைவேற்றிய எனது சகோதரருக்கும், அவர் மனைவிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. அப்பா அவர்களின் ஆசியும், திரு. அசோகன் அண்ணன் அவர்களின் ஆசியும் கவசமாக இருந்து எங்கள் குடும்பத்தை காப்பதற்கு இதற்கு மேல் உதாரணம் உண்டோ?

நன்றி! நன்றி! நன்றி!

-- விஜயா கபிலன், நெய்வேலி

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
புரிந்து படிப்பது முதல் நிலை.
ஞானத்தின் தர்க்கத் தகுதி அடுத்தது.
ஆன்மீக நிறைவைத் தரும் ஞானம் அதன் பின்னுள்ளது.
பகவானுடைய பொன்மயமான உருவம் அவரது சத்தியஜீவிய அனுபவமாக அதன்பின் அமைகிறது.
 

******



book | by Dr. Radut