04. சாவித்ரி
சாவித்ரி
P.128 Smiling like a new-born child at love and hope
பிறந்த குழந்தையின் பிழையற்ற புன்னகையின் அன்பும் ஆதரவும்
- இறைவனின் எண்ணிறந்த சக்தியைத் தன் சுபாவத்தில் ஏற்றாள்,
- அவளுடைய மனித இதயத்தில் திருவுள்ளத்தை அமர்த்தினாள்,
- ஒளிமயமான அவளிதயம் வழிகாட்டியாக எவரையும் தேடவில்லை:
- இறைவனின் சுவடான அவள் நடை தளர்ச்சியால் கறைபடவில்லை,
- இரவின் இருள் வந்து கண்ணைக் குருடாக்கவில்லை.
- எதிர்க்கும் வேலிக்கு வேலை தரப்படவில்லை;
- செயல் தானே சிறந்து மிளிரும் மகிழ்ச்சி.
- குணம் விசேஷமாகி மறந்த அவள் நிலை
- மனத்தின் ஆர்ப்பாட்டம் எழுப்பும் வண்ணச்சிறப்பு,
- இறைவன் எழும் வாழ்வும் மகிமை நிறைந்த கனவுகளும்,
- எண்ணற்ற ரூபமெழுப்பும் மந்திர மாயம்
- சிருஷ்டியின் இனிய அலைகள் தேடும் புது ரூபங்கள்,
- அற்புத நடனத்தின் ஆச்சரியத்தைக் கூட்டிய சுருதி,
- உடலை உணர்ந்து ஊடாடி அனுபவிக்கும் தேவதையின் ஆனந்தம்,
- மது எழுப்பும் சிருஷ்டியின் பூரிப்பு.
- ஆனந்த லோகத்தின் அழைப்பைக் கேட்டுணர்ந்தான்,
- அதில் கலந்து அனுபவிக்கும் கதவைக் காணவில்லை;
- எழுந்த பிளவை இணைக்கும் பாலமில்லை.
- ஆத்மாவைச் சூழ்ந்த இருளான வாயு மண்டலம்
- அமைதியற்ற வாழ்வின் பிம்பம் பிடிபடும் முடிச்சு.
- ஏங்கும் மனமும், தவிக்கும் உணர்வும் ஏதும் பயனில்லை,
- வருத்தமான எண்ணம் தரும் வாடிய அனுபவம்
- கவலையும், வருத்தமும், உறக்கமும் திரையிடும் திருஷ்டி
- அனைத்தும் ஆர்வமான கனவாகப் பிரகாசிக்கும்
- உழலும் உலகிடை உறையும் அவன் சுபாவம்
- எட்டியுள்ள இதயம் ஏற்கும் கருத்து.
- லோக வேதனையின் சாயலில் நடை பயிலும் நளினம்,
- இறைவனின் அரவணைப்பை அவன் பெற்றிருந்தபோதிலும்,
- நின்ற இடமெல்லாம் இரவின் நிலையெனக் கண்டு.
- உலகத்தின் கவலை உணர்த்துவதை அறியும் நிலை
- கனத்த அச்சில் வார்க்கப்பட்ட உடலும் உயிரும்,
- மகிழ்வால் மலரும் மகிழ்ச்சி, ஒளியால் மிளிரும் ஜோதி.
- நினைவும் உணர்வும் நித்திய சோதனை
- இன்பமும் துன்பமும் இணைந்து எழும் முதலசைவு
******
- Login to post comments