03. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
N. அசோகன்
31. | அறியாமை: | படைப்பில் இருக்கின்ற அடிப்படை ஒற்றுமையை உணராத நிலையை அறியாமை என்கிறோம். |
32. | அகம்பாவம்: | தான் தனித்து இருப்பதாக நம்முடைய அறிவு தவறாக நினைப்பதை அகம்பாவம் என்கிறோம். |
33. | இறப்பு: | ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்றபடி உடம்பு செயல்படாத பொழுது உயிர் உடம்பை விட்டு அகல்வதை இறப்பு என்கிறோம். |
34. | வளைந்து கொடுக்கும் தன்மை: | இறைவனின் திருவுள்ளத்திற்கு ஏற்றபடி நம்பர்ஸனாலிட்டியின் மாற்றிக் கொள்ளும் திறனை வளைந்து கொடுத்தல் என்கிறோம். |
35. | பரிசுத்தம்: | வெளியே தெரிகின்ற சுத்தத்திற்கு நிகரான சுத்தம் மனநிலையில் இருந்தால் அதை பரிசுத்தம் என்கிறோம். |
36. | வாழ்வின் எதிரொலி: | ஒருவருடைய உள்மனநிலையின் பிரதிபலிப்பாகவெளிவாழ்க்கை வழங்கும் Responseஐ வாழ்வின் எதிரொலி என்கிறோம். |
37. | ஆழ்மனது: | நம்முடைய பர்ஸனாலிட்டியின் ஆழத்தில் நம் விழிப்புணர்வை தாண்டிய நிலைகளும் நம் விழிப்புணர்வுக்கு கீழ் இருக்கும் நிலைகளும் இணைகின்ற இடத்தை ஆழ்மனது என்கிறோம். இந்த ஆழ்மனதில்தான் நம்முடைய சைத்திய ஜீவன் ஆழ்மனக் குகையில் இருப்பதாக பகவான் சொல்கிறார். |
38. | சைத்தியப் புருஷன்: | பரிணாம வளர்ச்சியில் பங்கேற்கும் நம் ஜீவாத்மாவினுடைய பிரதிநிதிதான் சைத்தியப் புருஷன். |
39. | பெரும் கடவுள்கள்: | Overmind என்ற நிலையில் உறைகின்ற பரிணாமவளர்ச்சி இல்லாத கடவுள்களை நாம் பெருங்கடவுள்கள் என்று வர்ணிக்கின்றோம். |
40. | அசுரர்கள்: | இறைவனுக்கு உதவியாக படைப்பில் ஒத்துழைக்க உண்டான தெய்வீகப் பிறவிகள் குணம் கெட்டு இறைவனை எதிர்க்க முனைந்த பொழுது அவர்கள் அசுரப் பிறவிகளாக மாறினார்கள். |
தொடரும்..... |
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் சத்தியஜீவியம் என்பது சத்தியத்தின் ஜீவியம். சத்தியஜீவியம் சித்-சக்தி. சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம். சத்தியம், ரிதம், பிருஹத் என்பது சத்தியஜீவியம். சத்தியஜீவியம் என்பது சத்திய சக்தி. சத்தியஜீவியம் காலத்தைக் கடந்தது. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்படுகிறது. சத்தியஜீவியம் காரண தேகம், பிரபஞ்சம். |
*******
- Login to post comments