06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஓடும் ஆற்று நீருக்கும் தொடக்கமாக ஓர் ஊற்று இருக்கும்.
- தொடக்கமும் முடிவுமில்லாத ஆறு அன்பர் வாழ்வு.
- சினம் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும்.
- சினத்தை மனத்தின் செயலிலிருந்து பிரித்தால் அகந்தை தெரியும்.
- கோபத்திற்குக் கண்ணில்லை.
- பொறுமை, நிதானம் சமர்ப்பணத்தால் கோபத்திற்கு தியானத்தின் பலன் தரும்.
- கேடு தானாகவே தேடி வரும்.
- கேடு அழியும் நேரம் வந்தால் அன்பரை நாடும்.
- கேடு காலத்தினால் விளையும் பயன் நன்மையே தரும்.
- அன்னைச் சூழல் காலத்திற்குக் கேடு விளைவிக்கும் குணத்தை மாற்றிவிடுகிறது.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆழ்மனத்தில் விரும்பிச் சேர்த்து இன்று மறந்தவை, பின்னர் (original ideas) புதிய கருத்துகளாக எழும். விரும்பி மறந்தவை புதியதுபோல் பூக்கும். |
*****
- Login to post comments