Skip to Content

08. அஜெண்டா

“Agenda”

There is no division between the Mother and the Supreme.

சத்புருஷன் என்பது சத்பிரம்மம் என்றும், சத்புருஷனெனவும் இரு நிலைகளில் உள்ளது. இதுவே சிருஷ்டியின் முதல் நிலை.

சத்திலிருந்து 1) பிரபஞ்சம் 2) காலம் 3) சத்தியம் 4) ஜீவியம் எழுகின்றன.

சத் மூன்றாகப் பிரிகிறது. அவை, ஆத்மா, புருஷா, ஈஸ்வரா. காலமும், இடமும் பிரபஞ்சத்தைத் தாங்குகின்றன.

சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாகும்பொழுது இடையே ஆத்மா உற்பத்தியாகிறது.

சத், ஜீவியம், ஆனந்தமாகவும் மாறுகிறது.

இவ்வைந்து மாறுதல்களும் சிருஷ்டியின் ஐந்து அம்சங்கள்.

இம்மாறுதல்கள் ஏற்படுமுன் உள்ள சத் என்பதை காலத்தைக் கடந்தது, பிரபஞ்சத்தைக் கடந்தது, சிருஷ்டியைக் கடந்தது, எந்த மாறுதல்களையும் கடந்தது என்கிறோம். ஆங்கிலத்தில் அந்நிலையை Transcendent, Supra Cosmic, Supreme என்கிறோம்.

ரிஷிகள் முடிவாக எய்திய நிலை அக்ஷரப் பிரம்மம்.

கீதை கூறிய புருஷோத்தமன், புருஷன் காலத்தைக் கடந்த நிலை.

புருஷன், சத் மூன்றாகப் பிரிவதில் - ஆத்மா, புருஷா, ஈஸ்வரா - நடுவில் உள்ள நிலை.

புருஷன் சிருஷ்டியில், பிரபஞ்சத்தில், காலத்தைக் கடந்தவன்.

புருஷன் சிருஷ்டியையும், பிரபஞ்சத்தையும் கடந்த நிலையில் புருஷோத்தமனாகும்.

அக்ஷரப் பிரம்மம் புருஷோத்தமனுக்குட்பட்டது.

புருஷோத்தமன் ஈஸ்வரனின் கடந்த நிலைக்குட்பட்டது.

ஈஸ்வரனின் கடந்த நிலையை Supreme என்கிறார் பகவான்.

அன்னைக்கும், Supreme, ஈஸ்வரனின் கடந்த நிலைக்கும் வித்தியாசமில்லை என்பது ஆரம்பத்தில் எழுதப்பட்ட வாக்கியம்.

நாம் அன்னையை வணங்குவதால் அன்னையின் ஆன்மீக உயர்வை ஏற்கிறோம். இதற்கு வேறு விளக்கம் உண்டா?

. Supreme காலத்தைக் கடந்த ஈஸ்வரன் கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனில்லை என்பதால், கர்மத்தைக் கரைக்கும் திறனுடையவன்.

. ஆயுள் காலத்திற்குக் கட்டுப்பட்டது. ஆயுளை வளர்க்கும் சக்தி காலத்தைக் கடந்த ஈஸ்வரனுக்குண்டு. ஜாதகப்படி நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் அன்பருக்கு நீடிக்கிறது என்றால், அதை நீடிக்க வைக்கும் திறன் தெய்வீகமனக் கடவுள்களான சிவன், விஷ்ணு, போன்றவர்கட்கு இயல்பாக இல்லை. அன்னைக்கு இயல்பாக உண்டு.

இக்கருத்தை வேறுவகையாகவும் கூறலாம்.

எதிரி எல்லையைக் கடந்துவந்தால், இராணுவம் எதிரியை விரட்டும். எல்லையில் உள்ள மக்களால் எதிரியின் இராணுவத்தை முறியடிக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்நாட்டு மக்களுக்கு இராணுவத் தகுதியுண்டு. அதுபோன்ற ஒரு நாடில்லை. 500 மைலுக்கப்பாலுள்ள எல்லை தாக்கப்பட்டால், இங்கு 5000 பேர் கூடிப் பிரார்த்தனை செய்தால், அப்பிரார்த்தனை அந்நாட்டு இராணுவம் வெற்றி பெறுவதன்மூலம் பலிக்கும். அப்பிரார்த்தனை இராணுவமின்றி பலி த்ததாக வரலாறில்லை. ஒருவர் ஆன்மீக சக்தி இராணுவத்தை விரட்டமுடியாது. அந்த சக்தி நாம் வணங்கும் கடவுள்கட்கு இல்லை.

சைனா இராணுவத்தை அன்னையின் சக்தி திரும்ப அனுப்பிற்று.

ஏனெனில் அன்னைக்கும் காலத்தைக் கடந்த ஈஸ்வரனுக்கும் வித்தியாசமில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மனித அனுபவத்திலில்லை. பெரிய நிகழ்ச்சிகளில் அன்னையின் ஆன்மீக சக்தி தெளிவாக வெளிப்படுவதுபோல் சிறிய நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டாலும், நாம் சிறிய நிகழ்ச்சிகளில் அதைக் கண்டாலும், விஷயம் சிறியதாக இருப்பதால், சக்தி மனத்தைத் தொடுவதில்லை.

காணாமற் போன பொருள் கிடைப்பது உலகம் அறிந்த ஆன்மீகப் பலன். தொலைந்த பொருளைத் தேடினால் பிரார்த்தனை பலி த்து அது கிடைக்கிறது. அன்னையிடமும் அதைக் காணலாம். காணாமற்போன பொருளைத் தொலைத்தவர், தொலைத்தது உண்மை, ஒரு குறையிருந்ததால் அது தொலைந்தது. அவர் தம் குறையை உணர்ந்து குறையை நிறைவாக்கியபின் நான் தேடமாட்டேன், பிரார்த்திக்க மாட்டேன் என்றால் அப்பொருளைக் கிடைக்கச் செய்யும் சக்தி உலகில் இல்லை.

அந்த சக்தி Supreme உடன் கலந்துள்ள அன்னைக்குண்டு. அதுபோன்ற பெரிய சக்தி சிறியதாகத் தோன்றும் நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டவை ஏராளம். அவை எளிய மனிதன் மனத்தைத் தொடா. அது ஒருவர் மனத்தைத் தொட்டு அன்னையின் Supreme கடந்த நிலையை உணர்த்துவது அவருடைய பக்தி அன்னையை அறியவேண்டியபடி அறிந்துள்ளது எனப் பொருள்.

. காணாத பொருள் தொலைத்தவரைத் தேடி வந்துள்ளது.

. துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்ட கப்பல் திரும்ப அன்பர் அழைப்புக்கு இணங்க வந்தது. விமானமும் அப்படியே வந்துள்ளது.

. கெடு முடிந்தபின் கடன் கொடுத்த பேங்க்கை 30 நாள் தவணை கேட்கப் போனவருக்கு பேங்க் கடனைக் கேட்காமல், மேலும் கடனளிக்க முன்வந்தது பாக்கி திருவுருமாறியதாகும்.

. நாமறிந்த தெய்வங்கள் சிருஷ்டியிலுள்ளவை.

. அன்னை பரிணாமத்திற்குரிய தெய்வம், அதனால் திருவுருமாறுகிறது.

. நாம் திருவுருமாற்றத்தைக் காணும்தோறும் அன்னையைக் காணலாம். அன்னை காலத்தைக் கடந்த Supreme எனக் காணலாம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சேவை என்பது இல்லாமலில்லை. அடுத்தவர் பயனடைவதற்கான செயல் நம் கொள்கைப்படிச் சேவையாகிறது. தன்னையோ,பிறரையோ கருதாமல் இலட்சியமாகச் செயல் அமைந்தால் அது சேவையாகும். அடுத்தவரிடமுள்ள ஆன்மா அதை ஏற்றுக்கொள்ளும்.அடுத்தவருடைய அகந்தைக்கு அது பயன்படாது.

சேவை ஆன்மாவுக்கு, அகந்தைக்கில்லை.


 


 



book | by Dr. Radut