13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்
அண்ணன் - நான் அதிகம் படித்ததில்லை. சில கதைகள் படிததிருக்கிறேன். அவற்றை நீ சொல்லியதுபோல் புரிந்து கொண்டிருக்கிறேன். 200 வருஷத்திற்கு முன் எழுதிய ஆங்கில நாவல் அது. ஒரு தனவந்தருக்கு 5 பெண்கள். அவர் வருமானம் ஆண்டுக்கு £ 2000 பவுன். ஆனால் அவர் வாழ்நாளுக்குப் பின் அந்தச் சொத்து பெண்களுக்கில்லை. அவர்கள் நாட்டில் பெண்கள் தாங்களே வரன் தேடிக் கொள்ளவேண்டும். முதல் பெண் சாது. அடுத்தவள் அக்காபோல் அழகியல்லள். ஆனால் தெளிவாகப் பரவசமாக இருப்பவள். அடுத்த 3 பேரும் வெறும் பெண்கள். தங்கள் நிலை அறியாதவர்கள். பெரிய பெண்கள் இருவரும் நிதானமானவர்கள். அவர்கள் ஊருக்கு இரு பெரிய தனவந்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஒருவருடைய வருமானம் £ 4000, அடுத்தவர் மிகப் பெரிய செல்வர், வருமானம் £10,000, இருவரும் திருமணமாகாதவர். இவர்கள் உள்ளூர் தனவந்தர் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். மூத்த பெண்ணை ஒருவர் விரும்புகிறார். திருமணம் நிச்சயம் என்ற அபிப்பிராயம் பரவுகிறது. விரும்புகிறவரும் சாது. பெரிய செல்வர், உள்ளூர் தனவந்தரை மட்டமாக நினைக்கிறார். அவருக்கு இரண்டாம் பெண் மீது தன்னை மீறிய பிரியம் எழுகிறது. அவரை அனைவரும் கர்வி என்கிறார்கள். இரண்டாம் பெண்ணுக்கும் அவரைக் கண்டாலே கசப்பு. தன்னை அளவுகடந்து விரும்புபவர் மீது வெறுப்பு. விருப்பம் அளவு கடந்திருந்தாலும் அவர் நடைமுறை அவள் மனதைப் புண்படுத்துகிறது. அதை விளக்க முயன்றவர் அவளை இழித்துப் பேசுகிறார்.
எதிர்பார்த்த திருமணம் நடைபெறவில்லை. வந்த தனவந்தர்கள் போய்விட்டனர். இரண்டாம் பெண்ணுக்கு தன் தமக்கை திருமணத்திற்கு தடை கர்விதான் என்று புரிகிறது. அவர்கள் ஊருக்கு இராணுவம் முகாமிட வருகிறது. ஆபீசர்கள் உள்ளூரில் எல்லோரிடமும் கலந்து பழகுகின்றனர். தனவந்தரின் கடைசி மூன்று பெண்களும் ஆபீசர்களுடன் பார்ட்டி, நடனம் என பலமுறை கலந்து கொள்கின்றனர். அவருள் ஓர் அழகன். இனிமை நிறைந்தவன். அனைவரும் அவனை விரும்புகின்றனர். அவன் தனவந்தர் வீட்டிற்கு வருகிறான். இரண்டாம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுக்கு அவன் முகம் மனம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் கர்வியின் பால்ய நண்பன், தனக்குக் கர்வி செய்த துரோகத்தைக் கூறுகிறான்.பெண் மனம் இரணமாயிற்று.
இரண்டாம் பெண் உறவினர் ஊருக்குப் போகிறாள், தற்செயலாய் கர்வியைச் சந்திக்கிறாள். இனிமையாகப் பேச முயல்கிறாள். பேச்சு கடுமையாக வருகிறது. அடுத்த நாள் கர்வி அவளைப் பார்த்து தன்னை மணக்கும்படிக் கேட்கிறான். 'உன் போன்றவரை என்னால் ஏற்க முடியாது' எனக் கோபமாக மறுக்கிறாள். அவன் செல்வம் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. அழகன் உருவம் மனதைத் தொடர்ந்து நிரப்புகிறது. பெண் அழகாகப் பழகினாலும், மனதிலுள்ளதை அவரிடம் கொட்டினாள். 'என் தமக்கை திருமணத்தை தடை செய்தாய். நண்பனுக்குத் தீங்கிழைத்தாய்' என்கிறாள்.
மறுநாள் கர்வி நீண்ட கடிதம் எழுதி அவளிடம் தருகிறான். திருமணத்தைத் தானே தடை செய்தது உண்மை. தாழ்ந்தது உன் குடும்பம். தடுப்பது என் கடமை. நண்பன் தவறானவன். அவன் கூறியது பொய். என் தங்கையை கடத்த முயன்றான் என்று கடிதம் கூறுகிறது.
அவள் அத்தை, கர்வி ஊரில் குடியிருந்தவள். அவ்வூர் வழியாகப் பிரயாணம் செய்ய இரண்டாம் பெண்ணை அழைக்கிறார். கர்வி ஊருக்கு வந்ததும் கர்வியின் வீடு அரண்மனை போலிருப்பதால் அனைவரும் பார்க்கும் இடமானதால் பெண்ணை அழைக்கிறார். கர்வி ஊரிலில்லை எனத் தெரிந்து போய் பார்த்துத் திரும்பும்போது வழியில் அவனைக் காண்கிறாள். அவன் மிருதுவாகப் பேசுகிறான். உபசாரம் செய்கிறான். தன் தங்கையை வந்து பார்க்கும்படி அழைக்கிறான். மறுத்துவிட்டாள். ஹோட்டலுக்கு வருகிறான். தன் தங்கையை அழைத்து வந்து கர்வி பெண்ணுக்கு அறிமுகப்படுத்துகிறான்.
அதே சமயம் தன் ஊரில் அழகன் தங்கையுடன் பழகி அவளைக் கடத்திப் போகிறான். செய்தி பெண்ணுக்கு ஹோட்டலில் கிடைக்கிறது. பதறிப் போகிறாள். இனி 5 பெண்கள் வாழ்வும் அழிந்துவிட்டது. அந்த நேரம் கர்வி வருகிறான். தன் கர்வத்தை மறந்து தனக்குக் கர்வியின் நண்பன் செய்ததைக் கூறுகிறாள். அவசரமாக ஊர் திரும்புகிறாள். அத்தையும், மாமாவும் லண்டனுக்குப் போய் காணாமல் போனவளைத் தேடுகிறார்கள். கண்டுபிடித்து அழகனை மணக்கச் சொன்னால் மறுத்து பணம் கேட்கிறான். £ 10,000 பேரம் முடிகிறது. மணம் முடிகிறது. ஓடிப்போன பெண் கணவனுடன் வீடு திரும்புகிறாள். தம் கல்யாணத்திற்கு கர்வி வந்ததாகக் கூறுகிறாள். அதன் மூலம் கர்வி தான் ஓடிப் போனவளைக் கண்டுபிடித்ததாகவும், பெருந்தொகை கொடுத்து அழகனைச் சமாதானப்படுத்தி பெரிய வேலை வாங்கிக் கொடுத்ததாகவும் இரண்டாம் பெண் அறிகிறாள். சாதுவும், கர்வியும் மீண்டும் பெண்ணின் ஊருக்கு வருகிறார்கள். சாது மூத்த பெண்ணை மணக்கிறான். கர்வி இரண்டாம் பெண்ணை மணக்கிறான், என்பது கதையின் சுருக்கம்.
தம்பி - எப்படிப்பட்ட குடும்பத்தில் எவ்வளவு அவமானம் நேர்ந்தது. எப்படியோ நல்லபடியாக முடிந்தது.
அண்ணன் - இக்கதையில் ஸ்ரீ அரவிந்தர் கருத்துப்படி நானறிந்தவை,
1) பெரிய துர்ப்பாக்கியம் என நாம் கருதுவதே, அக்குடும்பத்திற்கு அதிர்ஷ்டம்.
2) இரண்டாம் பெண் தறுதலையான அழகனை மனம் உவந்து விரும்பியதால் அழகன் அவர்கள் குடும்பத்திற்குத் தீங்கு செய்ய முடிந்தது.
3) அவ்வளவு பெரிய அவமானத்தைத் தன் குடும்பத்திற்குக் கொண்டுவந்தது தறுதலை என்றாலும், பெண்ணின் அறிவு அவன் தவற்றை அறிகிறதே தவிர, அவள் மனம் அவனைக் குறை கூறவில்லை. தொடர்ந்து விரும்புகிறது.
தம்பி - தலைகீழாக இருக்கிறதே நீங்கள் கூறுவதெல்லாம்?
அண்ணன் - பெரிய பெண்ணும், அவள் கணவனும் சாது. அங்கு உயிரில்லை, உயிர்ப்பு இரண்டாம் பெண்ணிடம் இருக்கிறது. மனம் தறுதலையான அழகனை நாடுகிறது. உயிர்ப்புள்ள பெண் தன் மனதை அவனிடம் கொடுத்ததால், அவனால் தவறு செய்ய முடிகிறது. ஓடிப்போன பெண்ணிடம் எந்த நல்லதும் இல்லை. உடல் உறுதியுள்ளது. உடல் உறுதியில் சக்தியுள்ளது. அந்த சக்தி தவறாகச் செயல்பட்டு பெரிய நல்லதைக் கொண்டு வருகிறது. அதனால் அவளே அக்குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் கொண்டுவந்தவள். இதுவே எனக்குப் புரிந்தது, எவரும் ஏற்கமாட்டார்கள் என நான் அறிவேன்.
தம்பி - எதுவும் விளங்கவில்லை.
‘Pride and Prejudice'
கர்வம், தப்பபிப்பிராயம்"
(சுமார் 200 ஆண்டுகட்கு முன் ஜேன் ஆஸ்டின் என்ற பெண் எழுதிய ஆங்கில நாவல். பணம் படைத்தவருடைய கர்வமும், அவரைத் தவறாகப் புரிந்துகொண்ட பெண்ணின் அபிப்பிராயமும் மோதுவதே கதை. பணமில்லாத அப்பெண் மீது அவருக்கு ஏற்பட்ட பிரியம் முடிவில் நிறைவேறியதைக் கருவாகக்கொண்ட கதை. நாட்டில் சமூக அமைப்பு மாறுவதைப் படம் பிடிப்பதால் இது மேலும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 44ஆம் பக்கத்தில் சுருக்கமாக எழுதியதின் விளக்கம்.)
Mr.பென்னட்டிற்கு ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா என 4 பெண்கள். அவர் லாங்பர்ன் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவ்வூருக்கு நெதர்பீல்ட் என்ற இடத்திற்கு பிங்லி, டார்சி என இரு செல்வர்கள் 5, 6 பெண்களுடன் வருகிறார்கள். ஊரில் உள்ள பலரும், இந்த 5 பெண்களும் பிங்லி வீட்டு நடனத்திற்கு வருகிறார்கள். நடனமாடும் பொழுது பிங்லியும், ஜேனும் நெருங்கி வருவதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசுகிறார்கள். எலிசபெத்துடன் நடனமாட டார்சி மறுத்ததால் அவளுக்கு கோபம் வருகிறது. டார்சிக்கு எலிசபெத்தின் மீது தம்மை மீறிய பிரியம் கட்டுமீறி எழுகிறது. தொடர்ந்திருந்தால் பிங்லிக்கும் ஜேனுக்கும் திருமணமாகும் என்பதால் அதைத் தவிர்க்க டார்சி அவ்வூரை விட்டுப் போக ஏற்பாடு செய்கிறார் புதியதாக வந்தவர்கள் அனைவரும் போய்விட்டனர்.
அவ்வூருக்குப் பக்கத்தில் இராணுவ முகாம் வருகிறது. அங்குள்ளஆபீசர்கள் ஊரில் பலருடனும் நெருங்கிப் பழகுகிறார்கள். எல்லா வீடுகட்கும் விருந்திற்கு வருகிறார்கள். அவர்களுள் விக்காம் என்பவர் மிக அழகானவர். அழகாகப் பழகுபவர். எலிசபெத்திற்கு அவர் பழக்கம். அவர் டார்சியின் பால்ய நண்பன். தம் வாழ்வைக் கெடுத்தவர் டார்சி, தமக்கு சேர வேண்டியதை மறுத்தவர் என்று எலிசபெத்திடம் கூறுகிறார். எலிசபெத்திற்கு அவருடைய அழகு மனதை மயக்குகிறது.
பென்னட்டிற்குப் பிறகு அவர் எஸ்டேட் காலின்ஸ் என்பவர்க்குப் போகும். அவர் எலிசபெத்தை மணக்க விரும்புகிறார். தாயார் பிரியப்படுகிறார். பெண் மறுத்துவிடுகிறார். சார்லோட் என்பவர் 27 வயதான பெண். சர் பட்டம் வாங்கியவர் மகள். பணமில்லை. காலின்ஸ் அவரை மணக்கிறார். டார்சியின் சின்னம்மா பெரிய பணக்காரி. அவளுடைய ஆதரவில் காலின்ஸ் பாதிரியாராக கென்ட் என்ற இடத்திலிருக்கிறார். எலிசபெத் சார்லோட்டுடன் கென்ட்டிலிருக்கும்பொழுது டார்சி சின்னம்மாவைப் பார்க்க வருகிறார். எலிசபெத்தை சந்தித்து தன்னை மணக்க வேண்டும் என்கிறார். அவள் கோபமாக, என் தமக்கை திருமணத்தை தடை செய்தாய், விக்காமிக்கு அநியாயம் செய்தாய். நான் எப்படி உன்னை மணக்க முடியும்? என்று மறுக்கிறாள்.
பதில் சொல்ல முடியாமல் திணறும் டார்சி தன் பதிலை கடிதமாக எழுதுகிறான். தான் திருமணத்தை தடை செய்ததை ஒப்புக் கொண்டு, எலிசபெத் குடும்பம் தாழ்ந்தது என்பதால் செய்ததாகக் கூறுகிறார். விக்காமிக்கு தான் கெடுதல் செய்யவில்லை எனவும், விக்காம் தன் தங்கையை கடத்த முயன்றதையும் எழுதுகிறான். எலிசபெத்திற்கு யோசனை எழுகிறது. ஆனால் டார்சியை ஏற்க மனம் வரவில்லை. மீண்டும் தன்னூர் திரும்புகிறாள்.
எலிசபெத்தின் சித்தப்பா கார்டனர் தாம் முன்னிருந்த லாம்டன் என்ற ஊர் வழியாக டூர் போக இருப்பதால், எலிசபெத்தையும் அழைக்கிறார். லாம்டன் டார்சியின் ஊர். அவர் அரண்மனை பெம்பர்லி. சின்னம்மா Mrs. கார்டனர் எலிசபெத்துடன் வருகிறார். லாம்டன் வந்தவுடன் பெம்பர்லிக்கு போகலாமா எனக் கேட்கிறார். டார்சி இல்லை எனத் தெரிந்து கொண்டு எலிசபெத் சம்மதிக்கிறாள். வீடும், எஸ்டேட்டும் பிரமாதமாக இருக்கிறது. Mrs. ரெனால்ய்ஸ் வீட்டு மானேஜர். டார்சி நல்லவர் என அவர் மூலமாக அறிகிறார். லாம்டன் ஹோட்டலில் விக்காமைப் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் தவறான செய்திகள். பெம்பர்லியை விட்டு வரும்பொழுது டார்சி தற்செயலாய் சந்திக்கிறார். பிரியமாகப் பேசுகிறார். மறுநாள் தம் தங்கை ஜார்ஜியானாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார்.
எலிசபெத்திற்கு ஜேனிடமிருந்து லிடியா விக்காமுடன் ஓடிப் போனதாக சேதி வருகிறது. பின்னாலேயே டார்சி பெம்பர்லிக்கு எலிசபெத்தை அழைத்துப் போக வருகிறான். அவள் நிலையிழந்திருக்கிறாள். லிடியாவைப் பற்றிய செய்தியை டார்சியிடம் சொல்லிவிட்டு டூர்யை ரத்து செய்து சித்தப்பா, சின்னம்மாவுடன் ஊர் திரும்புகிறாள்.
சித்தப்பா வருமுன் அப்பா லிடியாவைத் தேடி இலண்டன் போயிருக்கிறார். சித்தப்பா லண்டன் போய் தகப்பனாரை திருப்பி அனுப்பிவிட்டு லிடியாவை கண்டுபிடித்து, £ 10,000 கொடுத்து விக்காமை திருமணம் செய்ய சம்மதம் செய்து, பென்னட்டுக்குக் கடிதம் எழுதுகிறார். திருமணமாகி லிடியாவும் விக்காமும் ஊர் திரும்புகின்றனர். லிடியா பேசும்பொழுது டார்சி திருமணத்திற்கு வந்ததாகக் கூறுகிறாள். எலிசபெத் கார்டனருக்கு எழுதி விவரம் தெரிந்து கொள்கிறாள். டார்சி லண்டனில் வந்து விக்காமைக் கண்டு, பணம் கொடுத்து திருமண ஏற்பாடு செய்து வேலை வாங்கிக் கொடுத்ததை எலிசபெத் அறிகிறாள். விக்காம் போய்விடுகிறான்.
ஒரு நாள் காலையில் டார்சியின் சின்னம்மா காதரின் எலிசபெத் வீட்டிற்கு வந்து ஊரெல்லாம் பேசுவது உண்மையா எனக் கேட்கிறாள். காரசாரமான வாதம் நடக்கிறது. டார்சியை மணக்கமாட்டேன் என உறுதி கேட்கிறாள் காதரின். எலிசபெத் மறுக்கிறாள். காதரின் லண்டனில் டார்சியைப் பார்த்து எவ்வளவு நன்றி கெட்ட பெண் எலிசபெத் எனக் கூறுகிறாள். தம் மகளை டார்சி மணக்க ஏற்பாடு செய்ததை எலிசபெத் கலைத்தது காதரீனுக்குக் கோபம்.
எலிசபெத் தன்னை மறுக்கவில்லை என்பதை காதரீன் மூலம் அறிந்த டார்சி நேரே அவள் ஊருக்கு பிங்லியுடன் வந்து அவளை மணக்கிறான். பிங்லி ஜேனை மணக்கிறான்.
*****
அண்ணன் - யார் எதைச் சாதித்தாலும் அது தனி மனிதனுக்குரியதன்று, சமூகத்திற்குரியது. ஏனெனில் மனிதன் சமூகத்தின் சார்பாகச் செயல்படுகிறான். பலன் சமூகத்திற்குரியது. £ 10,000 சம்பாதிப்பவருக்கு 6000 ஏக்கர் நிலம் உண்டு. சமூக நியாயப்படி இதில் வரும் வருமானத்தை இங்கு வேலை செய்பவர் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும், இதுவே ஆன்மீக நியாயம். கதையில் உலக வழக்குப்படி முதலாளிக்கு (கர்வி) இப்பணம் முழுவதும் வருகிறது. ஆரம்பநாட்களில் சொத்தைச் சம்பாதித்தவன் வலிமையானவன் என்பதால் அவன் வருமானத்தைப் பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியில் இதுபோன்ற உடமைகள் பறிபோயின. கதையை விமர்சனம் செய்பவர் பெருமிராசுதார் ஏழைப் பெண்ணை மணப்பதால் புரட்சியைத் தவிர்க்க முடிகிறது என்கிறார். புரட்சி மூலம் ஏழைகட்குப் போகும் சொத்து திருமணம் மூலம் போகிறது என்கிறார். எனவே புரட்சி விலகுகிறது. இரண்டாம் பெண்ணுக்குக் கர்வி வரனாக அமைவது புரட்சி போன்றது. இது பெண்ணின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம்.
தம்பி - இதுவரை புரிகிறது.
அண்ணன் - கதையில் இந்த அதிர்ஷ்டம் வர கடைசி பெண் ஓடிப் போன நிகழ்ச்சியே காரணமாகிறது.
தம்பி - அதுவும் புரிகிறது.
அண்ணன் - வாழ்வு இரண்டாம் பெண் மூலம் இந்தக் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் தர கடைசி பெண்ணை ஓடும்படிச் சொல்கிறது.
தம்பி - அதுதான் கதை, ஆனால் ஓடிப்போன பெண் அதிர்ஷ்டத்தின் கருவி என நினைக்கவும் மனம் கசக்கிறதே.
அண்ணன் - எல்லா பேரிலக்கியங்களிலும் இந்த அம்சம் உண்டு, வாழ்விலும் உண்டு. நாம் கவனிப்பதில்லை. இந்த குடும்பத்திற்கு வந்த பெரிய அதிர்ஷ்டம் பெரிய அவமானத்தின் மூலம் வந்தது, எனவே நாம் எதை அவமானம், துர்ப்பாக்கியம் எனக் கருதுகிறோமோ அது வாழ்வுக்கும், இறைவனுக்கும் எதிரானவை என்பது மட்டும் புரிந்தால் போதும். தோற்றம் வேறு; உண்மை வேறு. உண்மை, தோற்றத்திற்கு எதிரானது.
நல்லது மூலம் கெட்டதும், கெட்டது மூலம் நல்லதும் வெளிவரும். வாழ்வுக்கு இரண்டும் தேவை என்பதை இக்கதையில் காண்கிறோம். கடைசி பெண் ஓடிப்போனது கெட்டது, கர்வி மனம் மாறியது நல்லது என நாம் கருதுகிறோம். வாழ்வுக்கு இரண்டும் அவசியம். அவள் ஓடிப் போய் இவர்கள் வீட்டில் பிரச்சினை எழாவிட்டால் கர்வி இக்குடும்பத்திறகு உதவி செய்யும் சந்தர்ப்பம் வராவிட்டால், நல்லது என நாம் கருதும் 3 திருமணங்கள் நடந்திருக்கா.
தம்பி - புதியதாக இருக்கிறதே இக்கருத்தும், இந்த விளக்கமும், வேறேதும் உண்டா?
அண்ணன் - இக்குடும்பத்தில் நடந்த இந்த பெரிய நல்ல காரியங்களை சாதித்தது அருள்.
தம்பி - அருள் இங்கே எப்படி வந்தது?
அண்ணன் - நாம் அருளாகப் பெறுவதை அன்பாக (Love) வெளியிடுகிறோம் என்கிறார் அன்னை. கர்வியின் கர்வம் எவரும் விரும்பாதது, ஆனால் அவனை உந்துவது அழகோ, பணமோ இல்லை. இரண்டாம் பெண் அழகற்றவள் என்று கூற முடியாது. ஆனால் முதற் பெண்போல் அழகியல்ல. அழகும், பணமும் இல்லாத பெண்ணை அன்பால் கர்வி விரும்புகிறான். அந்த அன்பே எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறது.
தம்பி - ஏன் கர்வியின் அன்பை மட்டும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்? முதற்பெண், கடைசி பெண், எல்லாப் பெண்களுக்கும் அன்பில்லையா?
அண்ணன் - கவர்ச்சி, தேவை, பிரியம், பாசம், பற்று, அன்பு என உணர்ச்சியைப் பிரித்தால், உடலுக்கு தேவை, உணர்ச்சிக்கும் இளமைக்கும் கவர்ச்சி, மனதிற்குப் பிரியம், உறவுக்கு பாசம், பற்று எனக் கூறலாம். உச்சகட்டத்தில் அன்பை வைத்தால் அது ஆன்மாவுக்குரியது. உலகில் நடப்பதெல்லாம் divine Love தெய்வீக அன்பால் என அன்னை கூறுகிறார். அன்பு என்பதை நாம் இக்கதையில் கர்வியிடம் மட்டுமே பார்க்கிறோம். அது தூய அன்பு, மற்றவை எல்லாம் அடுத்த நிலைகளைச் சார்ந்தவை.
தம்பி - எப்படி அதை மட்டும் அன்பு எனக் கொள்வது?
அண்ணன் - அவன் நாடுவது பணமோ, அழகோ அல்ல.
தம்பி - இளம்பெண்ணை இளைஞன் நாட எதுவும் தேவையில்லையே.
அண்ணன் - தேவை, கவர்ச்சி போன்ற அனைத்தும் தன்னை மட்டும் கருதுவது. அன்பு பிறரை மட்டும் கருதுவது. கர்வி பலன் எதுவும் எதிர்பார்க்கவில்லை, அவள் அன்பை பெறவும் முனையவில்லை. அவளைத் திருப்தி செய்வது மட்டுமே அவன் மனம் நாடுகிறது. அது அன்புக்கு அடையாளம். இரண்டாம் முறை அவன் தன்னை மணக்கும்படி கேட்டபொழுதும் உன் மனம் மாறவில்லை எனில் அதுவும் எனக்கு சம்மதம். நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் என்று கூறுகிறான். அது அன்பால் மட்டுமே கூறமுடியும்.
தம்பி - இரண்டாம் பெண்ணுக்கு, இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் கூற முடியுமா?
அண்ணன் - அதுவும் ஓர் அன்னை சட்டம்.
தம்பி - 200 ஆண்டுகட்கு முன் எழுதிய கதை இது. அன்னை 100 ஆண்டுகட்கு முன் வந்தவர்.
அண்ணன் - மனித உருவம், அவதாரம், என்பது 100 ஆண்டு. உலகம் ஏற்பட்ட நாளாக அன்னை இருக்கிறார். எல்லா சட்டமும் அவர் சட்டமே. 100 ஆண்டுகளாக அதிகமாக சட்டம் செயல்படுகிறது. ஒரு தகப்பனார் 6 பிள்ளைகட்கு சமமாக சொத்து கொடுத்தால், பிள்ளைகள் தங்கள் வாழ்வின் முடிவில் சமமாக இருப்பதில்லை. பெற்றது சமம். பயன்படுத்திய வழிகள் வேறு. பலன் அதற்கேற்ப மாறுகிறது. 5 பெண்களுக்கும் வந்த அதிர்ஷ்டம் அளவில் ஒன்றே, சுபாவத்திற்கு தகுந்ததுபோல் பலன் மாறி வருகிறது.
தம்பி - இதுவரை கேள்விப்பட்டதில்லையே.
அண்ணன் - இதே கருத்தை அன்னை வேறு வகையாகக் கூறுகிறார். அதன் அம்சங்கள் பல.
- சூரியன் எல்லாப் பொருள்கள் மீதும் ஒரே அளவு தன் பிரகாசத்தை சொரிகிறான். வீட்டை மூடி வைத்தால் உள்ளே இருட்டாக இருப்பதால், சூரியன் வீட்டின் மீது இருளைப் பொழிகிறான் என்று பொருள் அல்ல.
- அருளை அனைவர்க்கும் சமமாக அன்னை அளிக்கிறார்.
- சமமாக இல்லாதது அருளாக இருக்க முடியாது.
- நம் சௌகரியம், பிரியம், சுபாவம் ஆகியவற்றிற்கேற்ப நாம் அருளைப் பயன்படுத்துகிறோம்.
- அருள் காலத்தைக் கடந்தது. காலம் அன்பனுக்கு தடையில்லை. வயதாகிவிட்டது. இனி என்ன செய்யமுடியும். அப்பொழுது அலட்சியமாக இருந்தேன் விட்டுப்போயிற்று என்பது அன்னையிடம் இல்லை. இப்பொழுது உணர்ந்தால் எதையும் பெறலாம். நாம்பெறுவது நாம் உணர்வதைப் பொருத்திருக்கிறது. காலத்தையோ, சந்தர்ப்பத்தையோ, புறநிகழ்ச்சிகளையோ பொருத்ததில்லை. பெரியபதவியிலுள்ள அன்பர், பெரும் செல்வரான அன்பர், எளிய அன்பர்க்கு கட்டுப்பட்டிருப்பதன் உட்பொருள் இதுவே. அனைவரும் சமம் என்பது அருளுக்குரிய ஆன்மீக உண்மை.
* எந்த அன்பரும் எதையும், எந்த அளவிலும் பெறமுடிவு செய்தால், முடிவுக்குரிய முயற்சி எடுத்தால் பலிக்கும் என அன்னை கூறுகிறார்.
இரண்டாம் பெண் நாடுவது உண்மை. அடுத்த பெண்கள் அன்றாட சௌகரியத்தைக் கருதுகிறார்கள். அவரவர்கள் விழைவது அவரவர்கட்கு கிடைக்கிறது. அன்னை சட்டப்படி, அன்னையை ஒரே அளவில் ஏற்கும் அன்பர்கள் அனைவரும் பெறும் அருள் சமம். அதன் தோற்றம் வேறு. தோற்றத்தையும் நிர்ணயிக்கமுடியும். IAS ஆபீசர்களில் ஒருவர் கலெக்டராக இருக்கிறார். அடுத்தவர் நில ஆர்ஜிதம் பார்க்கிறார். வேறொருவர் Record room (Archives) பொறுப்பிலிருக்கிறார். கலெக்டருக்கு முழு அதிகாரம். Recordலிருப்பவருக்கு அதிகாரமேயில்லை. ஆனால் சம்பளம், rank ஒன்றே. அடுத்த நாளே கலெக்டர் பதவிக்கு அவரும், recordக்கு இவரும் மாற்றப்படலாம்.
தம்பி - இந்தக் கதை மூலமாக சொல்லக்கூடிய அன்னை சட்டம் வேறெதாவதுண்டா?
அண்ணன் - எல்லா சட்டங்களையும், எந்தக் கதை மூலமாகவும் சொல்லலாம்.
தம்பி - இரண்டாம் பெண்ணைத் தேடி பெரும் பணம் எப்படிவருகிறது?
தம்பி - அதற்கு முன் பணம் என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளவேண்டும். இந்த கதையைப் பொருத்தவரை இரண்டு விஷயம் முக்கியம். 1. பணம் அதைவிட முக்கியமானதை நாடி வரும் (இது எல்லா விஷயத்திற்கும் பொது). சமூகப் புரட்சி ஏற்படும் பொழுது பணம் அதற்கெதிரானதை அல்லது அதற்கு தேவையானதை நாடி வரும். இக்கதை அதற்கு உதாரணம். கர்விக்கு £ 10,000 வருமானம், அவனுக்கு அவன் முக்கியம். அவனுக்கு வரும் மனைவி முக்கியம். வரும் மனைவி எஸ்டேட்டிற்கு மகுடமாக இருக்கவேண்டும். அதாவது தன்னைவிட உயர்ந்தவளாக இருக்கவேண்டும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனை போற்றும் மனப்பான்மையுடன் இருப்பதால், அவனைவிட உயர்ந்த குணலட்சணங்களுள்ள பெண்ணை அவன் மனம் நாடுகிறது. சமூகம் மாறுகின்ற காலம் என்பதால், அவனைவிட உயர்ந்த குணமுள்ள இரண்டாம் பெண் - அவன் கர்வத்திற்கு பணியாதவள் அவளொருத்தி தான் - அடுத்த தாழ்ந்த செல்வ நிலையிலிருந்து அவனுக்கு அமைகிறாள்.
தம்பி - அந்த நேரம் பிரெஞ்சுப் புரட்சி நடந்து தனவந்தர்களை ஏராளமாகக் கொலை செய்தார்கள். பணமுள்ளவன் பணமில்லாத பெண்ணை மணப்பது பணத்தைக் ‘கொலை' செய்வது போலல்லவா? அதுவே புரட்சிக்கு பதிலான மாற்றம். ஆளும் வர்க்கத்தைக் கொலை செய்வது புரட்சி. அவர்களுடைய குணங்களை - கர்வம், அலட்சியம் - மாற்றுவது புரட்சியல்லவா? புரட்சி நடந்து 20 ஆண்டுகளுக்குப் பின் கர்வம், அலட்சியத்தை ஆளும் வர்க்கத்தினர் கைவிடுகின்றனர். தாமே முன்வந்து அக்குணங்களைக் கைவிடுவதல் புரட்சிக்கு சமம். இந்த மாற்றத்தில் பணம் இருக்குமிடத்திலிருந்து, இல்லாத இடத்திற்கு மாறுகிறது. அதுபோல் இரண்டாம் பெண் பணம் பெறுகிறாள்.
தம்பி - திடீரென பெரும் பணம் இரண்டாம் பெண்ணுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
அண்ணன் - அன்பர்கள் பணத்தை அளவு கடந்து பெற முடியும் என்று ‘பணம்' என்ற கட்டுரை கூறுகிறது. அதில் முறை விளக்கமாக இருக்கிறது. இரகஸ்யம் முறையில்லை. கருவில் உள்ளது. கரு Self - giving பரநலம். மனிதன் தான் சம்பாதிப்பதை விட பிறர் சம்பாதிக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறான். இது மனித வாழ்வு. வாழ்வில் உள்ளவனுக்கு அன்னை முறை பயன் தராது. பிறர் வளம் பெறுவதில் மனம் மலர்வதே அன்னை சட்டம். அம்மனப்பாங்கு உள்ளவர்க்கே ‘பணம்' என்ற கட்டுரை பயன்படும். முதலிரண்டு பெண்கட்கும் தாழ்ந்த உள்ளமில்லை. அதனால் உயர்ந்த செல்வம் வருகிறது.
குறிப்பாக பெரும் பணம் பெற்ற இரண்டாம் பெண்ணுக்கு ஆதாயத்தை நாடும் மனம் இல்லவேயில்லை. She is not at all mercenary. ஆதாயத்தை நாடாதவரை பணம் விரைந்து நாடும் என்பது சட்டம்.
தம்பி - ஸ்ரீ அரவிந்தர் ஒரு சட்டம் உண்மையானால் அதன் எதிர்ச்சட்டமும் உண்மை என்கிறாரே. அதற்கு இங்கு உதாரணம் உண்டா?
அண்ணன் - ஓடிப்போன பெண் அதற்கு உதாரணம். அது ஆதாயத்தை மட்டும் நாடும் பெண். அவள் ஒருபடி மேலே செல்கிறாள். தான் ஓடிப்போனது தவறு என்றே அவளால் நினைக்க முடியவில்லை. அவளுக்குத் தான் முதலில் திருமணமாகிறது. திருமணம் எனப் பெண்ணின் மனத்தின்படி அவளுடைய திருமணமே மிக உயர்ந்தது. கண் நிறைந்த கணவன் பெண்ணுக்கு முக்கியம். திருமணத்தைப் பொறுத்தவரை கடைசியாக நினைவுக்கு வருவது குணம். பெண் அழகியானால், ஆணுக்கு அவளுடைய கெட்ட குணம், மட்ட குணம் கண்ணுக்குத் தெரியாது. அவள் எந்தத் தவறு செய்தாலும் ஆணின் மனம் அவள் அழகை மட்டுமே காணும். காளிதாசனை அப்படித்தான் அரசகுமாரி மணந்தாள். மாதம் ரூ.3000/- கை செலவு செய்யும் பெண் மாதம் ரூ.3000/- சம்பளம் வாங்கும் அழகனை, அவன் அழகுக்காக மட்டும் ஆர்வமாக விரும்பினாள். பல பெண்களை வெட்கமின்றி நாடுபவன் அழகன் எனப் பெயர் பெற்றவன். அவன் அழகனுமில்லை. அழகுணர்ச்சி உள்ளவர் அவன் விகாரமானவன் என அறிவார். சிவந்த மேனியுடையவன். பெண்களை தவறாக நாடியதால் அவனைப் பிடித்து உதைத்து, துணிகளைப் பிடுங்கிப் கொண்டு நிர்வாணமாக விரட்டினர். அதை அறிந்த பின்னும், அவனை மனமார பெண்ணுள்ளம் நாடுகிறது. அவர் நல்லவர் என பெண் மனம் மணக்கிறது. ‘அவரை' நினைத்தால் கணவனை ‘அவன்' என்கிறது மனம். மனிதன் ஆசை வெட்கமறியாது என அனுதினமும் நிரூபிப்பவன். இக்கதையில் அழகன் ஓர் பெண்ணுடன் ஓடிப்போன பின்னும் எந்தப் பெண்ணின் மனமும் அவனைத் தவறு என நினைக்கவில்லை. அத்தனை பேர் மனமும் அவன் அழகைப் போற்றுகிறது. ஆண் பெண் கவர்ச்சிக்கு அடிப்படை அழகு என்பதை கதை எல்லாயிடங்களிலும் எடுத்துக் கூறுகிறது.
- தொடரும்
* பணம்
வறுமை என்பது பணமில்லை. பணப்பற்றாக்குறை என்பது. ஆன்மீக சட்டப்படி உயர்ந்த எண்ணம், பரநலம், பரந்த மனப்பான்மையுள்ள அன்பர் எவரும் எந்த அளவு பணத்தையும் உற்பத்தி செய்யலாம் என்பது உண்மை. அதை சாதிக்கும் முறை, அதன் தத்துவம் ஆகியவற்றிற்குரிய அடிப்படைக் கருத்துக்கள் கீழ்கண்டவை.
- சிருஷ்டி சத்தில் ஆரம்பித்து, சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் வழியாக மனத்தில் முடிகிறது. மனமே சிருஷ்டியின் முடிவு.
- வாழ்வும், ஜடமும் மனத்தின் பிற உருவங்களே. மனம் சிருஷ்டித்ததே வாழ்வு.
- பணம் வாழ்வின் பகுதி.
- வாழ்வையே உற்பத்தி செய்த மனத்தால், அதன் பகுதியான பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
- மனத்திலுள்ள எண்ணம், அதனுள் உள்ள உறுதியுடன் இணைந்து செயல்பட்டால் சக்தி பிறந்து வாழ்க்கையாகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி உருவம் பெற்றால் பொருள்களாக மாறி ஜட உலகமாகிறது எனவும் கூறுகிறது.
- எண்ணமும், உறுதியும் இணைந்தால் வாழ்வு எழுகிறது எனில் பணம் வாழ்வில் பகுதி என்பதால், உறுதி பணத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அதற்கு எண்ணம் இசைந்தால் பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும்.
- உறுதி என்பது திறமை. திறமை என்பது தெளிவு பெற்ற சக்தி. எண்ணம் என்பது குறிக்கோள்.
பணம் ஈட்டும் திறமை, தெளிவு பெற்று, எண்ணம் அதை இலட்சியமாக ஏற்றால் பணத்தை மனம் உற்பத்தி செய்யும் என்ற கொள்கை எழுகிறது.
- பணத்தை சேகரம் செய்தவரிடம் நாம் இதைக் காண்கிறோம். பணத்தை எந்த வழியாகவும் சேகரம் செய்யலாம். அருள் மூலம் நல்ல முறையில் மட்டும் சேகரம் செய்ய முடியும்.
- அபரிமிதம் எப்படி எழுகிறது?
- வாழ்வு என்பது பேரரங்கம். எண்ணமும், உறுதியும் வாழ்வையே சிருஷ்டித்தவை. அதனால் பகுதியான பணத்தை சிருஷ்டித்தால் பலன் அபரிமிதமாக இருக்கும்.
- எண்ணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். கெட்ட எண்ணத்தில் சுலபமாக சம்பாதிக்கலாம். நல்ல எண்ணத்தால் பணம் சம்பாதிப்பது சிரமம். பலன் குறைவு. ஆனால் கெட்ட எண்ணம், நல்ல எண்ணமாக மாறிய பின் அதன் திறன் அபரிமிதமாகப் பெருகும். திருடன் மனம் மாறி வியாபாரம் செய்தால் சிறப்பாக இருப்பானல்லவா?
- கெட்ட முறையில் சம்பாதிக்கும் பொழுது மனம் உறுத்தும். முறை நல்லதானால் உறுதி தெளிவாகச் செயல்படும்.
- பணம் பகுதி என்பதாலும், எண்ணம் நல்லது என்பதாலும், உறுதி மலர்ந்து செயல்படுவதாலும் பலன் அபரிமிதமாக எழுகிறது.
அன்னை சக்தி சேர்ந்தால் அபரிமிதம், அளவற்றதாகிறது.
கட்டுரையின் கரு : பிறர் வாழ்வு மலர்வதில் பெருமிதம் கொள்ளும் அன்பர், பணம் திரட்டும் முறைகளை அறிந்து, நல்ல முறையில் உறுதியுடன் செயல்பட்டால் அருள் அவர் முயற்சிக்கு அபரிமிதமான பலன் உடனே தரும்.
- சக்தி அதிகமானால் அதிகம் சம்பாதிக்கலாம். உடலுழைப்பை மன உழைப்பாக்கினால் பலன் பெருகும். பணம் என்பது ஒரு organisation முறை என்பதால் மனம் முறைபட்டால் சம்பாதிக்கும் திறன் பெருகும். விரைவாக செயல்படுவது பெரிதும் உதவும். பணம் என்பதனுள் பொதிந்துள்ளவை நம்பிக்கை, சக்தி, முறை (organisation). சர்க்கார் மீது நம்பிக்கையிருப்பதால் பேப்பரான நோட்டை ஏற்கிறோம். மனித உழைப்பு - சக்தி - பொருளை உற்பத்தி செய்வது பணமாகிறது. நாம் முயன்று செயல்பட்டு சாதிப்பவை - திருமணவிழா, வீடு கட்டுவது போன்றவற்றிற்கு முன்போல் நாமே முயல வேண்டாம். முயற்சியுடையவர் பணம் பெற்று நமக்காக அதை செய்கிறார்கள் - பணத்தால் இன்று நடக்கின்றன. எனவே இவை மூன்றும் பணம். இவை முக்கிய அம்சங்கள். இவற்றை நம் மனம், மனத்தின் தன்மையால் மட்டும் உயர்த்த முடியும் என்பதால் மனத்தால் பணத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றேன்.
- ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் நிலம் மட்டுமே விளைந்தது. அந்த விளைச்சல் பணமாயிற்று. 300 ஆண்டுக்கு முன்னால் நிலம் மட்டும் விளைச்சல் தரவில்லை. நானும் விளைபொருள்களை உற்பத்தி செய்கிறேன் என பாக்டரி வந்தது. கடந்த 50 ஆண்டாக நிலமும், பாக்டரியும் செய்வதை service தொழில் செய்கிறது. டெய்லர், தச்சன், வக்கீல், ஆசிரியர் போன்ற தொழில்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்தாலும் பாக்டரி, நிலத்தை நம்பியிருந்தன. இப்பொழுது service தொழிலை நம்பி பாக்டரியிருக்கிறது. நிலமும், பாக்டரியும், தொழிலும் இதுவரை பணத்தை உற்பத்தி செய்தது போல் இனி மனம் பணத்தை உற்பத்தி செய்யும். இது எப்படி முடியும் என்பதை விளக்குவதே இலட்சியம்.
- Process of creation of money பணம் இதுவரை உற்பத்தியான முறையை மனம் அறிந்து கொண்டால், அம்மனத்திற்கு பணத்தை உற்பத்தி செய்யும் திறன் எழுகிறது. எந்த தொழிலும் பணத்தை உற்பத்தி செய்கிறது. பணம் என்பதன் இரகஸ்யத்தை அறிந்தவர்க்கு எந்த தொழிலின் இரகஸ்யமும் விளங்கும். அதனால் எல்லா தொழில்களையும் சிறப்பாக நடத்தும் ஞானம் அவருக்குண்டு. அந்த ஞானம் முழுமை பெற்றவுடன் அது சக்தியாகிறது. பணம் திரட்டுவோர் அச்சக்திக்கு உட்படுவார்கள். அதன் மூலம் மனம் பணத்தை உற்பத்தி செய்யமுடியும். இந்த ஞானமுடையவர் எந்த துறையில் வேலை செய்தாலும் அத்துறை ஈட்டுவதுபோல் 10 அல்லது 100 மடங்கு ஈட்டுவார் என்பதை மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்கிறேன்.
- வேறு வகையாக ஓரளவு இக்கொள்கையை உலகம் இன்று பூர்த்தி செய்கிறது. ரூ.30,000க்கு வாங்கிய கலைக்களஞ்சியம் இன்று நெட்டில் இலவசமாகக் கிடைக்கிறது, எனில் இப்பணம் உபரி. இதுபோல் internet மூலம் மக்கள் கையில் மறைமுகமாக பணம் உபரியாகிறது. உபரியாகிறது எனில் பணம் அதிகமாக உற்பத்தியாகிறது எனப் பொருள்.
- 30 ஆண்டு வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர் 92 வயதிருந்தால் 32 ஆண்டு பென்ஷன் பெறுகிறார். அதாவது 1 ஆண்டு சேவைக்கு 2 ஆண்டு சம்பளம் பெறுகிறார். பணம் உபரியாகிறது, இரட்டிக்கிறது.
- பணம் பற்றாக்குறையாக இருப்பதால் அதற்கு இன்று மரியாதையுண்டு. காற்று, தண்ணீர்போல அளவு கடந்து இனமாகக் கிடைத்தால் அதற்கு மரியாதை போய்விடும். இன்டர்நெட், வெளிநாட்டு போன் கால் phone callக்கு உள்ளூர் call charge வசூல் செய்கிறது. எந்தப் புத்தகமும் internetஇல் இனாமாகக் கிடைக்கும். இது நீடித்தால் பணம் கொடுத்து வாங்க வேண்டியவை குறையும். தொடர்ந்தால் பணம் தேவையில்லை என்ற நிலையும் ஒரு நாள் வரும். கம்ப்யூட்டர் வந்தபின் பணம் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு சில நிமிடத்தில் போகிறது. இதுபோல் 1 நாளில் 2 trillion dollar கம்ப்யூட்டர் மூலம் நாடுவிட்டு நாடு போகிறது. லட்ச ரூபாய் முதல் போட்டவன் 10,000 ரூபாய் சம்பாதித்தால் 10% இலாபம், அதே சரக்கு 6 மாதத்தில் விற்றால், 6 மாதத்தில் 10%, 1 வருஷத்தில் 20% இலாபம் வருகிறது. ஒரு மாதத்தில் விற்றால் 120% இலாபம் வரும். ஒரு லட்ச ரூபாய்க்கு 1 வருஷத்தில் 1,20,000 இலாபம் வரும். பணம் வேகமாகப் பிரண்டால் (turnover) இலாபம் அதிகமாக வரும். இது பணத்தை உபரியாக உற்பத்தி செய்வதாகும். ஏற்கனவே இலட்ச ரூபாய் முதல் போட்டவர் இப்பொழுது 12 இலட்சம் முதல் போட்டவர் பெறும் இலாபம் பெறுகிறார், அதாவது 12 மடங்கு இந்த வியாபார முறை பணத்தைப் பெருக்குகிறது. Internet அதுபோன்ற transactions--ஐ க்ஷணத்தில் செய்கிறது. மாதக்கணக்கு, வாரக் கணக்கில் நடந்தவை 1 நிமிடத்தில் நடந்தால் ஆயிரம் மடங்கு பணத்தை உற்பத்தி செய்வதாக நாம் அறிகிறோம். வேகத்தை அதிகரிப்பதால் பணம் பெருகுகிறது.
- மனத்தால் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளைச் செய்யமுடியும் என்பதுபோல் மனம் வேகத்தை அளவுகடந்து அதிகரிக்கும்.
- வேலை, உழைப்பு, நம்பிக்கை, செலாவணி, வேகம், முறை, எண்ணம், கருத்து, சக்தி ஆகியவை பணத்தை உற்பத்தி செய்தவை. மனம் இத்தனையையும் தானே உற்பத்தி செய்யவல்லது என்பதால் மனத்தால் பணத்தை உற்பத்தி செய்யமுடியும்.
இதை நம் வாழ்வில் சாதிப்பதெப்படி?
- மனம் மட்டும் செயல்பட்டு பணம் உற்பத்தியாகும் என்பது தத்துவரீதியாக உண்மை. நடைமுறையில் அதை எப்படிப் புரிந்து கொள்வது?
- உடலால் செய்தவற்றையும், உணர்வால் செய்பனவற்றையும் மனத்தால் செய்தால் அதிகப் பணம் சம்பாதிக்கலாம். எதிரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டால் உடலால் செயல்படுபவன், நேரே எதிரியைப் போய் தாக்கி விடுதலை பெறமுயல்வான். உணர்வால் செயல்படுபவன், ஊரைக் கூட்டி நியாயம் கேட்டு நிலத்தைப் பெறுவான். அறிவால் செயல்படுபவன் சிந்திப்பான். எதிரி எதற்குக் கட்டுப்படுவான், எதை நம்புகிறான், ஜாதகத்தை நம்புபவனானால், ஜாதகப்படி அவன் காரியம் தோற்கும் எனக் காட்டலாமா? கர்மத்தை நம்புகிறானா? சட்டத்தை நம்புகிறானா? எதை நம்புகிறான் என யோசனை செய்வான். இவன் நாணயஸ்தன் என்பதால் சர்க்கரை ஆலை 15 ஏக்கர் பண்ணையை இவனை நம்பி கொடுத்திருக்கிறது என்றால், அவனிடம் போய் உன் நாணயத்தை ஆலையில் போய் சொல்வேன் என்பான். இவன் நிலம் திரும்ப வரும். அறிவால் செயல்படும்பொழுது பலன் அதிகம். பணம் ஈட்டும் செயல்களை அறிவு நிலைக்கு உயர்த்தினால் அபரிமிதமாகப் பணம் பெருகும்.
- நாம் செய்யும் தொழிலில் இன்று அதிகபட்ச நுணுக்கங்கள் எவ்வளவு உள்ளதோ அத்தனையும் பின்பற்றினால் அறிவு செயல்படும். அத்துடன் அருள் சேர்ந்தால் தொழில் அபரிமிதமாகப் பெருகும்.
*****
- Login to post comments
Comments
* பணம் Numbering the
* பணம்
‘Pride and
13. பிரார்த்தனை பலிக்க
Mr.. பென்னட்டிற்கு ஜேன்,
Mr.. பென்னட்டிற்கு ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா என 4பெண்கள். அவர் லாங்பர்ன் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவ்வூருக்கு நெதர்பீல்ட் என்ற இடத்திற்கு பிங்லி, டார்சி என இரு செல்வர்கள் 5, 6 பெண்களுடன் வருகிறார்கள். ஊரில் உள்ள பலரும், இந்த 5 பெண்களும் பிங்லி வீட்டு நடனத்திற்கு வருகிறார்கள். நடனமாடும்பொழுது பிங்லியும், ஜேனும்நெருங்கி வருவதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றுபேசுகிறார்கள். எலிசபெத்துடன் நடனமாட டார்சி மறுத்ததால் அவளுக்கு கோபம்வருகிறது. டார்சிக்கு எலிசபெத்தின் மீது தம்மை மீறிய பிரியம் கட்டு மீறிஎழுகிறது. தொடர்ந்திருந்தால் பிங்லிக்கும் ஜேனுக்கும் திருமணமாகும் என்பதால்அதைத் தவிர்க்க டார்சி அவ்வூரை விட்டுப் போக ஏற்பாடு செய்கிறார்புதியதாக வந்தவர்கள் அனைவரும் போய்விட்டனர்.
என்பதால் அதைத் - Gap inb/w these words
செய்கிறார் புதியதாக - Gap inb/w these words