02. பிறரை அவமானப்படுத்தும் பெருந்தகை
பிறரை அவமானப்படுத்தும் பெருந்தகை
- உயர்ந்தவன் உயர்ந்த முறையில் உலகை உயர்த்துவான்.
- தாழ்ந்தவன் தன் நிலைக்குத் தரணி வர ஏங்குவான்.
- உயர்ந்ததும், தாழ்ந்ததும் உறவாடுவது உலக வாழ்வு.
- தாழ்ந்தவன் உயர்ந்தவனுக்குச் சமமாக அவனை அவமானப் படுத்துவான்.
- கணவன் ஏழையானால், மனைவி இதைச் செய்வதுண்டு.
- மனைவி மட்டமானால், கணவனை உயர்ந்த இடத்தில் மறுப்பாள், மட்டம் எனக் கூறுவாள்.
- அவமானப்படுத்தித் தன் மானத்தை உயர்த்த விரும்புபவர் தவறாது அவமானப்படுத்துவதில் அளவு கடந்து ஜெயித்து, அபரிமிதமாக மகிழ்வர். அடுத்த கட்டத்தில் அர்த்தமற்றவரிடம் அதிகக் கொடுமையை அசிங்கமாக, ஆபாசமாக அனுபவித்துத் தொடர்ந்து அழிவர்.
- கணவனோ, மனைவியோ இக்கொடுமையை அடுத்தவருக்குத் தவிர்க்க, ஓயாது ஒழியாது ஒரு கணம் தாமதியாது கெட்டதை நல்லது எனக் கூற கற்க வேண்டும்.
- இப்படிச் செய்யும் பாவம், உயர்ந்த புண்ணியம்.
- அந்தஸ்து குறைவான சம்பந்தம் அசிங்கத்தை ஆபாசமாக்கும்.
- வாழ்வின் கொடுமை அன்னையின் இனிமையாகும் வழி — அபத்தமான கடுமை. திட்டுவது பலன் தரும், பெறுபவருக்குப் புண்ணிய அருள் சேரும்.
அன்னை கூறியதை அறியும் வகையிது.
******
- Login to post comments