Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

57. அற்புதம் இயல்பான நிகழ்ச்சியாக நடப்பது - தன்னை மறந்த நிலை.

  • அற்புதம் அற்புதமாக நிகழ்வது அற்புதம்.
  • அற்புதம் இயல்பான நிகழ்ச்சியானால், எவருக்கும் அது அற்புதம் எனத் தெரியாது.
  • அது நம் வாழ்வில் நடந்தால், அதில் பொதிந்துள்ள அற்புதத்தை நாம் சூட்சுமமாக அறிவது யோகம் பலிக்கும் எனக் கூறுகிறது.
  • வெள்ளிக்கிழமை வயிற்றிலிருந்த கல், திங்கட்கிழமை மறைவது.
  • ஹோட்டலில் தொலைந்த மணிபர்ஸ் 200 மைல் கடந்து புதரின் மீது இருப்பது.
  • மஞ்சள் காமாலைக்கு அன்னையே குணப்படுத்துவார் என மருந்தையும் நிறுத்தியபின் குணமாவது.
  • காலில் குத்திய குண்டூசி மறைவது.
  • போன்றவை அற்புதம்.
  • பாலைவனத்தில் கிடைத்த நீரூற்று.
  • அரிய அட்மிஷன் கிடைத்தது.
  • பெரும் தொகை கொடுத்துப் பெற வேண்டிய ஆர்டர் தொகையின்றிக் கிடைத்தது.
  • வாராத கடன் பிரார்த்தனையால் வந்தது.
  • 10,000 கமிஷன் கொடுக்க முன் வந்த முதலாளியிடம் 600 ரூ. சம்பளம் பெறும் மானேஜர் கமிஷன் வேண்டாம் எனக் கூறியதை ஏற்று பெரும் சொத்தில் டீ பங்கு (48,000 ரூபாய் பெறுமான) கொடுத்தது.
  • போன்றவை அற்புதமானாலும், பார்வைக்கு இயல்பாக நடந்ததாகத் தோன்றும்.
  • யோகம் பலிக்கும் நிலையில், சூட்சுமக் கதவு திறந்த நிலையில் இது போன்றவை நடக்கும்.
  • 1920இல் அன்னை முடிவாகப் புதுவை வந்தபொழுது (overmind) தெய்வீக மனச்சக்தியை பகவான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
  • அப்பொழுது சுவரில் வீரல் விட்டிருந்ததை அன்னையிடம் கூறியபொழுது அது மறைந்து விட்டது.
  • கடல் தேவதை அன்னைக்குக் கட்டுப்பட்டு மதில் சுவரைக் கட்ட அனுமதித்தது.
  • தேள் கொட்டிய பூனையின் கால் பகவான் பார்வை 20 நிமிஷம் பட்டு விஷம் நீங்கியது.
  • கருநாகம் அன்னையைத் தேடி வந்து நமஸ்காரம் செய்தது.
  • Lake Estateஇல் வயதான மூதாட்டி கொடுத்த குரலை அன்னை டென்னிஸ் கோர்ட்டில் கேட்டு வந்து அவளைப் பார்த்தது.
  • போன்ற அற்புதங்கள் நடந்தன.
  • பகவான் தெய்வீக மனம் இருளைப் போக்கவல்லதன்று, சத்திய ஜீவியம் அதைச் செய்யும், அதனால் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம் என்றார்.
  • அது முதல், நடக்கும் அற்புதங்கள் இயல்பாகக் காட்சி அளிக்கின்றன.
  • ஓர் அன்பருக்கு இந்த இயல்பான செயலின் பின்னணியில் உள்ள சக்தி தெரியுமானால் அவர் யோகத் தகுதி பெற்றவராவார்.
  • யோகத் தகுதியைப் பலவாறு கூறலாம்.
    • அன்னையிடம் எதையும் கேட்க முடியாத மனப்பான்மை.
    • யோக அம்சங்கள் - மௌனம், சூட்சுமப் பார்வை போன்றவை - முயற்சியின்றி பலிப்பது.
    • ஜாதகத்திலில்லாத நல்லது நடப்பது.
    • உதவி பெற்றவர் நன்றியுடனிருப்பது.
    • அன்னைக்குத் தானே நம் நினைவு வருவது.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வெளியிலிருந்து திரும்பி உள்ளே போ.
அங்கேயே இரு. புறம் அகத்தினுடையது.
புறத்தை உட்கொண்ட அகம் பிரம்மபுரம்.
 
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நினைப்பதுபோல் இருக்கிறோம்.
இருப்பதுபோல் நினைப்பதில்லை.
 
 
 
*****



book | by Dr. Radut