03. சாவித்ரி
சாவித்ரி
P.137 Asking for light she followed darkness' clue
ஒளியைத் தேடி இருளை நாடும்
- விழிப்பை நோக்கித் தடமாடும் குருட்டு சக்தி
- புலனில் விழித்த ஜடம் ஜடத்தைக் கவர்ந்தது
- குருட்டுத் தொடர்பு, சிறு தொடர்பு எழுப்பும் தெறிக்கும் பொறிகள்
- மூடிய அடிமனம் மூலத்தில் எழுப்பும் உணர்வு
- பெருகி வரும் உணர்ச்சி வெள்ளம், எண்ணமாக நடிக்கும் ஊமைக் குமுறல்கள்
- விழிக்கும் இயற்கை கொடுக்கும் அடிகளை ஏற்கும் உணர்வு
- அதுவும் ஜீவனற்ற பதிலான செயலே
- ஆட்டம், தாவித் தாண்டி இயற்கையின் கனவாயிற்று
- பண்பற்ற வேகம் முரட்டுத்தனமாக உரசி ஓடிற்று
- தன்னையறிந்து தமரையறியாமல் தன்னை மட்டும் கருதி
- இருள் காரிருளுடன் மோதி
- குழப்பத்தின் ஆட்சியில் செயல் பெற்ற சுதந்திரம்
- வாழ்வது அவசியம், பிழைக்கும் வழி பிறிதொன்றில்லை
- பதைக்கும் நிலையற்ற செயல் முனைந்து பெற்ற ஈடுபாடு
- தெரியாத ஆசை தேடிய உணவு
- இயற்கையின் எழுச்சியே இயல்பான சட்டம்
- சக்தி சக்தி மீது மோதி கண்ட பலன் ஏதுமில்லை
- இருளின் பிடியை ஏற்று ஓடியதே மிச்சம்
- நெகிழ்ந்த உணர்வும் நெளியும் உணர்ச்சியும் அறியும் மூலமில்லை
- சிற்றின்ப வெற்றியும் வேதனையும் எளிதாக எழுந்து அழிந்தன
- எண்ணமற்ற வாழ்வின் முரட்டு செயல்கள்
- தேவையற்ற உலகின் வீண் பெருமை
- வருத்தம் தரும் எளிய பலனை வருந்தியழைக்கும் மனம்
- அர்த்தமற்ற வேதனை, இருள் மண்டிய சங்கடம்
- முயற்சிக்கு முழுமை தரும் எதுவும் எதிர்கொள்ளவில்லை
- விழித்தெழுந்த ஆத்ம பார்வை அப்படிக் கருதவில்லை
- தனியான நட்சத்திரம் பொலிவுற மிளிரும்
- விலகி நிற்கும் தழல் ஜோதியின் தனித் துவாரபாலகன்
- சிந்தனையற்ற இருள் செறிந்து நகரும் வேகம்
- இலட்சியமற்ற லோகத்தின் தனிமனித சிந்தனையாளர்
- இறைவனெனும் சூரியன் உதிக்கக் காத்திருக்கும்
- காலம் செய்யும் பணியில் கடவுளின் நோக்கம் தெரிகிறது
- இல்லாத நோக்கமும் எடுத்துத் தரும் பலன்
- மந்திரப் பலனும் தெய்வீக மாற்றமும் கருவாக எழுந்தன
********
ஸ்ரீ அரவிந்த சுடர் அன்னை எண்ணத்திற்குக் கட்டுப்பட்டவரிலர். |
*******
- Login to post comments