Skip to Content

09. கணக்கால் பணம்

குடும்பத்தில் அவ்வப்போது பணம் வருகின்றது; வந்த பணமும் பல வகைகளில் செலவாகிக்கொண்டே இருக்கின்றது. ‘வரவும் நமக்குத் தெரிந்தே வருகிறது; செலவும் நமக்குத் தெரிந்தே போகிறது. இதில் கணக்கு என்ன?’ என்று விட்டேற்றியாக இருப்பது, பொருள் வரவுக்குத் தடையாகிவிடுகின்றது. வரவு, செலவுகளைக் குறித்துக் கணக்கு எழுதும்பொழுது, நம்முடைய கவனம் முழுதுமாகப் பணத்தில் ஈடுபாடு கொள்கின்றது. இந்தக் கவனம் மிகவும் முக்கியம். நாம் எந்த அளவிற்குக் கவனத்தைக் கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்குப் பொருள் நம்மைத் தேடித் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

******

 

முதல் பாகம் முற்றும்



book | by Dr. Radut